Tuesday, May 3, 2011

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

"தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார்
எச்.எம்.

"எந்த அற்புத மரி?" என்றேன் நான்.

"இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத
மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்."

prabanjan22
தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர
முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக
இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு
விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே
நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட
ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான்.

Saturday, April 23, 2011

தமிழ் கூடு : ஒரு பார்வை

ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவி., யில் அதிக மார்க் எடுத்த மாணவி படிக்க வசதியில்லாததால் நெசவு
தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஊரணிபட்டி தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவர்
தபால்துறையில் தினக்கூலி அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார். இவரது
மகள் குருலட்சுமி. பிளஸ் 2 தேர்வில் தமிழ் 182, ஆங்கிலம் 160, இயற்பியல்
173, வேதியியல் 193, கம்ப்யூட்டர்
சயின்ஸ் 183 , கணக்கு 187 என 1078 மதிப்பெண்கள் பெற்றார். உயர்கல்வி
படிக்க வசதியில்லாததால் தற்போது கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு
வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது: தந்தையின் குறைவான வருமானத்தை
கொண்டு படிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தேன். பள்ளியில் படிக்கும் போதே
மாலை நேரங்களிலும், விடுமுறையிலும் நெசவு தொழிலில் ஈடுபட்டு அதில்
கிடைக்கும் குறைந்த தொகையை கொண்டு படித்து வந்தேன். தற்போது எனது "கட் -
ஆப்' மார்க் 185. இன்ஜினியரிங்க் படிக்க ஆசையாக உள்ளது. நண்பர்களின்
உதவியால் இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்துள்ளேன். குடும்ப வறுமையால்
எனது கனவு கைகூடுமா



இந்த பெண்ணிற்கு உதவ தமிழ் கூடு முடிவுசெய்துள்ளது இதற்கு தலைமை நம்மில் வயதில் மூத்த அம்மா திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்களை முன்மொழிந்துள்ளேன்
உதவ விரும்புபவர்கள் தமிழ்கூட்டை தொடர்புகொள்ளவும்

------------------------------------------------------------------------------------------------------------



' தமிழ் கூடு ' அமைப்பின் மூலம்
அச்சிறுமியின் கல்விக்காக கட்டப்பட்ட
கல்லூரி கட்டணத்தின் இரசீது !!!


குருலட்சுமியின் தந்தையுடன் ,
' தமிழ் கூடு ' உறுப்பினர்கள் !



மாணவியின் தந்தையுடன் ' தமிழ் கூடு ' நிர்வாக உறுப்பினர் மகேஷ் அவர்கள்.









மாணவியின் கல்விக்காக தனது பங்களிப்பை வழங்கும் மோகனா அவர்கள் .
















மாணவிக்கு உதவிகள் வழங்கும்
பத்ரி அண்ணா அவர்கள் !










மாணவிக்காக வழங்கப்பட்ட உதவிகள் :



கல்விக் கட்டணம் - II




பெற்றோருடன் மாணவி



மாணவி குருலட்சுமி












































தமிழ் கூட்டின் மூலம் வழங்கப்பட்ட காசோலையுடன் மாணவி





இவருக்கு அடுத்த அரையாண்டுக்கான கல்விக் கட்டணம் கட்ட வேண்டி இருப்பதால் , உதவி செய்ய விரும்புவோர்உடன் தொடர்பு கொள்ளவும் :
thamizh.koodu.amaippu@gmail.com
+91 900 380 555 6